உள்ளூர் செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் பெண் உள்பட மேலும் 4 பேர் கைது

Published On 2023-03-31 14:00 IST   |   Update On 2023-03-31 14:00:00 IST
  • அ.தி.மு.க. பிரமுகர் நாகராஜூக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி செல்வகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.
  • செல்வகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் நாகராஜை கொலை செய்தது தெரிய வந்தது.

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிளாய் கிராமம் தெருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 41).இவர் அ.தி.மு.க. கிளை செயலாளராகவும், டிராவல்ஸ் தொழிலும் செய்து வந்தார். கடந்த 24-ந் தேதி நாகராஜ் நண்பர்களுடன் மதுகுடிக்க சென்றபோது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் நாகராஜை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே செல்வக்குமார் உள்பட 4 பேரை கைது செய்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ராமு, ரவி, சிலம்பரசன், மகாலட்சுமி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

கடந்த ஜனவரி மாதம் கிளாய் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களுக்கு பிறகு ஆடு வெட்டி கறி விருந்து நடைபெற்றது. அப்போது இந்த விருந்தில் அ.தி.மு.க. பிரமுகர் நாகராஜூக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி செல்வகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் பல முறை நாகராஜை தீர்த்துக்கட்ட முயற்சி செய்து உள்ளார். சம்பவத்தன்று நாகராஜ் மதுகுடிப்பதை அறிந்து செல்வக்குமார் தனது கூட்டாளிகளுடன் சென்று தீர்த்து கட்டி இருப்பது தெரியவந்தது. கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News