உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே ரேஷன் அரிசி கடத்தல்

Published On 2022-12-10 12:55 IST   |   Update On 2022-12-10 12:55:00 IST
  • பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த வேனை மடக்கி சோதனை செய்தனர். இதில் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

அதை ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்ட பொன்னேரி தாலுக்கா அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News