உள்ளூர் செய்திகள்

சிங்கப்பெருமாள்கோவில் அருகே பஸ் மோதி முதியவர் மரணம்

Published On 2022-12-03 11:44 GMT   |   Update On 2022-12-03 11:44 GMT
  • சிங்கப்பெருமாள் கோவில் அருகே செல்லும்போது சாலையை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீது அரசு பஸ் மோதியது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறைமலைநகர்:

சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்தவாசி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே செல்லும்போது சாலையை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீது அரசு பஸ் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்து போன முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Similar News