உள்ளூர் செய்திகள்
- இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
- மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
டாக்டர் வாணதி நாச்சியார் முன்னிலையில், ஆயுஷ் மருத்துவம் குறித்து மூச்சு பயிற்சி, யோகா, ஒத்தடம், ஆயில் குளியல், தியானம், சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஆலோசனையும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இதில் மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.