உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை அருகே மின் கம்பி அறுந்து விழுந்து பள்ளி மாணவன் பலி

Published On 2023-10-30 07:08 GMT   |   Update On 2023-10-30 07:08 GMT
  • மின் கம்பி அறுந்து மாணவர் மீது விழுந்ததில் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கந்தர்வகோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த கோமாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ராம்குமார் (வயது 15). இவர் செங்கிப்பட்டி அருகே உள்ள முத்தாண்டிபட்டி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் விடுமுறைக்காக கோமாரம் வந்திருந்த ராம்குமார் இன்று காலை பள்ளி சீருடையில் பள்ளிக்கு வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது சாலை ஓரத்தில் மின் கம்பத்திலிருந்து மின் கம்பி அறுந்து மாணவர் மீது விழுந்ததில் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மாணவனின் தாய் இந்திராணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பலியான மாணவனின் தந்தை செந்தில் குமார் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

Tags:    

Similar News