உள்ளூர் செய்திகள்

நவீன சலவையகங்கள் அமைக்க நிதி உதவி வழங்கும் திட்டம்

Published On 2022-09-03 15:26 IST   |   Update On 2022-09-03 15:26:00 IST
சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர்கள் 10 நபர்களை கொண்டு ஒரு குழு அமைத்து அக்குழுவிற்கு நவீன முறை சலவையகம் அமைக்க தேவைப்படும்.

காஞ்சிபுரம்:

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3 லட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர்கள் 10 நபர்களை கொண்டு ஒரு குழு அமைத்து அக்குழுவிற்கு நவீன முறை சலவையகம் அமைக்க தேவைப்படும் உபகரணங்கள் வாங்க அதற்கான நிதி ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Similar News