உள்ளூர் செய்திகள்

சேலம் கூட்டுறவு துறையில் ஓய்வு பெற 5 நாட்களே இருக்கும் நிலையில் பெண் சார்பதிவாளர் சஸ்பெண்டு

Published On 2023-04-25 10:19 GMT   |   Update On 2023-04-25 10:19 GMT
  • சேலம் மாவட்ட கூட்டுறவு துறை பொது விநியோக திட்ட சார்பதிவாளராக பிரேமா என்பவர் பதவி வகித்து வருகிறார்.
  • பிரேமா கூட்டுறவுத் துறையில் பணியாற்றியபோது, 3 முறை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சேலம்:

சேலம் மாவட்ட கூட்டுறவு துறை பொது விநியோக திட்ட சார்பதிவாளராக பிரேமா என்பவர் பதவி வகித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே சேலம் மாநகரில் சார்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் பிரேமா வருகிற 30-ந் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். குறிப்பாக அவர் பணியாற்றி வரும் இந்த துறை பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துதல், உணவுப் பொருட்களின் விலையை மேலாண்மை செய்தல், அனைவருக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் போதுமான அளவு உணவுப் பொருட்கள் வழங்குதல், எளிதில் மக்கள் அணுகிப் பெறக்கூடிய வகையில் நியாயவிலைக் கடைகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே பிரேமா கூட்டுறவுத் துறையில் பணியாற்றியபோது, 3 முறை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகார் குறித்து விசாரணை நடத்தி சார்பதிவாளர் பிரேமா மீது வணிக பொருளாதார குற்ற புலனாய்வுதுறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிரேமா இன்னும் 5 நாளில் ஓய்வு பெறும் நிலையில், அவரை கூட்டுறவுத்துறை பதிவாளர் ரவிக்குமார், சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News