உள்ளூர் செய்திகள்
ஆவடி அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.45 ஆயிரம் கொள்ளை
- ஆவடி அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.45 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
- கொள்ளை குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநின்றவூர்:
ஆவடி அடுத்த பொத்தூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத். இவர் பொத்தூர் பகுதியில் என்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற கம்பெனி நடத்தி வருகிறார். இவரது தந்தை ரவிசங்கர் அதே கம்பெனியில் நேற்று இரவு தங்கி இருந்தார்.
இன்று அதிகாலை ரவிசங்கர் உள்ளே சென்று பார்த்த போது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த விலை உயர்ந்த கேமரா மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.