உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு அருகே ரூ.22 லட்சம் மதிப்புள்ள தண்டவாள பொருட்கள் திருட்டு

Published On 2022-08-04 06:14 GMT   |   Update On 2022-08-04 06:14 GMT
  • ரெயில் தண்டவாளத்தை இணைக்கும் பணிக்காக ரெயில்வே ஊழியர்கள் சென்ற போது தண்டவாள பொருட்கள் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
  • இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருடுபோன தண்டவாள பொருட்களின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அடுத்த திருமணி- ஒத்திவாக்கம் இடையே ரெயில் தண்டவாளத்தை இணைக்க பயன்படுத்தும் சுமார் 11 ஆயிரம் கிளிப்பர்களை தண்டவாளத்தின் அருகே ஊழியர்கள் வைத்து இருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அந்த கிளிப்பர்களை அள்ளி சென்று விட்டனர்.

இந்த நிலையில் பணிக்காக ரெயில்வே ஊழியர்கள் சென்ற போது தண்டவாள பொருட்கள் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருடுபோன தண்டவாள பொருட்களின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News