உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகளுடன் குவிந்த வியாபாரிகள்.

பக்ரீத்தை முன்னிட்டு பாவூர்சத்திரம் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Published On 2022-07-07 11:45 IST   |   Update On 2022-07-07 11:45:00 IST
  • பாவூர்சத்திரத்தில் உள்ள அரசு ஆட்டுச்சந்தையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.
  • இன்று காலையில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆட்டு வியாபாரிகள் தங்களின் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

தென்காசி:

பக்ரீத் பண்டிகை நெருங்குவதை ஒட்டி இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள அரசு ஆட்டுச்சந்தையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

இன்று காலையில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆவுடையானூர், மேலப்பாவூர், கீழப்பாவூர், சாலைப்புதூர், திரவிய நகர், மருதடியூர், திப்பனம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆட்டு வியாபாரிகள் தங்களின் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் குவிந்ததால் அதனை வாங்குவதற்காக கடையம், சம்பன்குளம், தென்காசி, பொட்டல்புதூர், கடையநல்லூர், செங்கோட்டை, சுரண்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து அதிக அளவில் மக்கள் குவிந்தனர்.

ஒவ்வொரு ஆடுகளின் மதிப்பும் ரூ.6 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 25,000 வரையில் விற்பனையானது. மொத்தத்தில் பாவூர்சத்திரம் அரசு ஆட்டுச் சந்தையில் இன்று மட்டும் ரூபாய் 2 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளது.

Tags:    

Similar News