உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே ரவுடி அடித்துக்கொலை- போலீசார் விசாரணை

Published On 2023-07-07 08:52 GMT   |   Update On 2023-07-07 08:52 GMT
  • போலீசார் விரைந்து வந்து ஜெபராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • மர்மநபர்கள் அவரை கொலை செய்து தண்டவாளம் அருகே வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

வேப்பம்பட்டு:

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் என்கிற ஜெபராஜ் (வயது30). ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளது. இந்தநிலையில் ஜெபராஜ் இன்று காலை வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே சென்னை மார்க்கத்தில் உள்ள தண்டவாளம் பகுதியில் உள்ள முட்புதரில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருவள்ளூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து ஜெபராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது ஒரு கால் மற்றும் தலையில் மட்டும் பலத்த காயம் உள்ளது. எனவே மர்மநபர்கள் அவரை கொலை செய்து தண்டவாளம் அருகே வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

அவருடன் மோதலில் உள்ளவர்கள் யார்? யார்? கடைசியாக யாருடன் சென்றார் என்பது குறித்த விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News