உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை

Published On 2023-04-03 12:25 IST   |   Update On 2023-04-05 16:27:00 IST
  • கடந்த சில மாதத்துக்கு முன்பு திடீரென ருகேஷ் தற்கொலை செய்து கொண்டார்.
  • பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த அனுப்பப்பட்டை சேர்ந்தவர் ருகேஷ். இவருக்கும் உப்பரபாளையம் சுந்தரையா தெருவை சேர்ந்த ஷாலினி (வயது21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 மாதத்தில் பெண்குழந்தை உள்ளது.

குடும்பப் பிரச்சினை காரணமாக ஷாலினி குழந்தையுடன் உப்பரபாளையத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதத்துக்கு முன்பு திடீரென ருகேஷ் தற்கொலை செய்து கொண்டார்.இதனால் ஷாலினி மிகவும் மனவேதனை அடைந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஷாலினி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே சிகிச்சை பலனின்றி ஷாலினி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News