உள்ளூர் செய்திகள்

செல்போனில் பேசியதை கண்டித்ததால் 2 குழந்தையுடன் தாய் மாயம்

Published On 2023-02-03 06:24 GMT   |   Update On 2023-02-03 06:24 GMT
  • சொப்னா 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
  • 2 குழந்தையுடன் தாய் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரி மதினா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பரசுராமன். இவர் பொன்னேரி பஜாரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சொப்னா இவரது மகள்கள் மோனிகா (8), கன்னிகா (6). சொப்னா செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதை கணவர் பரசுராமன் கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த சொப்னா 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News