உள்ளூர் செய்திகள்
பொன்னேரி பஸ் நிலையத்தில் முதியவர் மயங்கி விழுந்து மரணம்
- பஸ் நிலையத்தில் இருந்து நடந்து சென்றார். அப்போது ஆனந்த் ரெட்டி திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
- போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரியை அடுத்த புலி குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த ரெட்டி (வயது80). இவர் தீபாவளியையொட்டி கும்மிடிப்பூண்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று இருந்தார். பின்னர் இன்று காலை அவர் பஸ்மூலம் திரும்பி பொன்னேரி பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் பஸ் நிலையத்தில் இருந்து நடந்து சென்றார். அப்போது ஆனந்த் ரெட்டி திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.