உள்ளூர் செய்திகள்

சித்தாலப்பாக்கத்தில் பிளஸ்-1 மாணவன் மயங்கி விழுந்து பலி

Published On 2022-08-07 14:14 IST   |   Update On 2022-08-07 14:14:00 IST
  • சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகர், 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சிவராமன்.
  • பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேளச்சேரி:

சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகர், 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சிவராமன். இவரது மகன் சூர்யா (வயது16) மேடவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே உடல் நிலை பாதிப்பு இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் சூர்யா, வீட்டின் அருகே சைக்கிள் ஓட்டியபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News