உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே கால்வாயில் மூழ்கி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

Published On 2023-01-17 13:58 IST   |   Update On 2023-01-17 13:58:00 IST
  • கடன் செலுத்த சென்ற பிரகாஷ் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
  • உறவினர்கள் பல இடங்களில் தேடியும் பிரகாஷை காணவில்லை.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35 ). இவர் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி (25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனலட்சுமி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரகாஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

கடன் செலுத்த சென்ற பிரகாஷ் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரைக் காணவில்லை.

இதற்கிடையே போந்தவாக்கம் கிராம எல்லையில் உள்ள நாட்நாச்சியார் கோவில் அருகே பாசன கால்வாயில் பிரகாஷ் பிணமாக மிதந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரகாஷ் கால் தவறி கால்வாயில் விழுந்த போது தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News