உள்ளூர் செய்திகள்

பெரியபாளையத்தில் வட மாநில வாலிபர் தற்கொலை

Published On 2022-12-19 12:50 IST   |   Update On 2022-12-19 12:50:00 IST
  • பெரியபாளையம் அருகே உள்ள வெங்கல் கிராமத்தில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
  • ராபீஸ் குமார் திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள வெங்கல் கிராமத்தில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் வடமாநிலத்தை சேர்ந்த ராபீஸ் குமார் (வயது21) உள்ளிட்ட 7 பேர் பெரியபாளையம் பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில், நள்ளிரவு ராபீஸ் குமார் திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் பெரியபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ராபீஸ் குமாரின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து அவருடன் தங்கி இருந்த நண்பர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

Similar News