உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் அரசு மருத்துவமனையில் தேன்கூடு இருப்பதால் நோயாளிகள் அச்சம்

Published On 2023-03-04 07:10 GMT   |   Update On 2023-03-04 07:10 GMT
  • கட்டிடத்தில் 4-வது மாடியில் அறுவை சிகிச்சை மையம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையில் உள்ள தேன்கூட்டை தகுந்த பாதுகாப்புடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரில் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் ஜெ.என் சாலையில் அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை உள்ளது.

இங்குள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு கட்டிடத்தில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தக் கட்டிடத்தில் 4-வது மாடியில் அறுவை சிகிச்சை மையம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு கர்ப்பிணிப் பெண்களுக்கு அறுவை சிகிச்சை பகுதியில் ஜன்னல் அருகே பெரிய தேன்கூடு உள்ளது.

இதனால் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை பெறும் பெற்றோர்கள், சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் அச்சத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையில் உள்ள தேன்கூட்டை தகுந்த பாதுகாப்புடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News