உள்ளூர் செய்திகள்

பழவேற்காட்டில் மழைக்கால பாதுகாப்பு மைய கட்டுப்பாட்டு அறை திறப்பு

Published On 2022-11-02 16:44 IST   |   Update On 2022-11-02 16:44:00 IST
  • பழவேற்காடு முகத்துவாரம் வழியாக வெள்ள நீர் அதிகமாக கடலுக்குள் செல்கின்றன.
  • கடலோர மீனவர்களுக்கான புயல் பாதுகாப்பு மைய கட்டுப்பாடு அறை பழவேற்காட்டில் திறக்கப்பட்டுள்ளன.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சுற்றி 63 கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

பழவேற்காடு முகத்துவாரம் வழியாக வெள்ள நீர் அதிகமாக கடலுக்குள் செல்கின்றன. இந்நிலையில் கடலோர மீனவர்களுக்கான புயல் பாதுகாப்பு மைய கட்டுப்பாடு அறை பழவேற்காட்டில் திறக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் தெரிவித்ததாவது, கடலோர பகுதி கிராமங்களில் புயல் மழை காரணமாக காணப்படும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அலுவலகத்திற்கு 27976262 ,27972457 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் மழையின் காரணமாக மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், தகவல் தெரிவித்த உடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News