உள்ளூர் செய்திகள்

கார் மோதியதில் நேரு சிலை உடைந்தது- காங்கிரஸ் கட்சியினர் புகாரால் டிரைவர் கைது

Published On 2022-12-29 14:39 IST   |   Update On 2022-12-29 14:39:00 IST
  • நசரத்பேட்டை சிக்னல் அருகே மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் சிலை பீடத்துடன் அமைக்கப்பட்டு இருந்தது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.

பூந்தமல்லி:

பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை சிக்னல் அருகே மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் சிலை பீடத்துடன் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நேருசிலை அமைக்கப்பட்டு இருந்த பீடம் மீது வேகமாக மோதியது. இதில் பீடம் மற்றும் நேரு சிலை உடைந்து சேதம் அடைந்தது. இதனை கண்டித்து காங்கிரஸ்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் கார் டிரைவரான திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை காயம் அடைந்தார். நேரு சிலை சேதம் அடைந்தது தொடர்பாக நசரத்பேட்டை வட்டார காங்கிரஸ்தலைவர் வெங்கடேசன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.

Similar News