உள்ளூர் செய்திகள்

பழவேற்காடு மீனவர்கள் வலையில் சிக்கிய மர்ம பொருள்

Published On 2023-02-10 16:51 IST   |   Update On 2023-02-10 16:51:00 IST
  • கடலுக்கு சென்ற அரங்கம்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் வலையில் மர்ம பொருள் ஒன்று கிடைத்துள்ளது.
  • வலையை சுத்தம் செய்யும் போது அப்பொருள் கண்ணில் படவே அதை பத்திரமாக எடுத்து வைத்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் தினசரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். நேற்று இரவு கடலுக்கு சென்ற அரங்கம்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் தனபால் என்பவர் வலையில் மர்ம பொருள் ஒன்று கிடைத்துள்ளது. இரவு வீடு திரும்பி காலை வலையை சுத்தம் செய்யும் போது அப்பொருள் கண்ணில் படவே அதை பத்திரமாக எடுத்து வைத்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தெர்மாகோல் உள்ளே எலக்ட்ரானிக் சாதனங்கள் அடங்கிய பேட்டரி மற்றும் சிப் போன்ற பொருட்கள் உள்ளே இருப்பதால் மேலும் பலூன் மூலமாக இது பறக்க விடப்பட்டு ஸ்ரீஹரிகோட்டா அருகே கிடைத்ததாலும் இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

மர்ம பொருள் கிடைத்த தகவலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News