உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் மோதல்- முதியவர் பலி
- திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் அருகே உள்ள செல்லம்பட்டறை கிராமத்தை சேர்ந்தவர் இருதயராஜ்.
- திருவள்ளூர் அருகே விபத்தில் முதியவர் பலியானார்.
திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் அருகே உள்ள செல்லம்பட்டறை கிராமத்தை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது70). இவர் மோட்டார் சைக்கிளில் செல்லம் பட்டரை நோக்கி சென்றார். நரசிங்கபுரம் கீழச்சேரி சாலையில் சென்றபோது எதிரே கடம்பத்தூர் வெண் மனப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென இருதய ராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் இருதயராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். முனிரத்தினம் படுகாயம் அடைந்தார்.