உள்ளூர் செய்திகள்

மோகனூர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று- தாய் தற்கொலை

Published On 2023-03-14 05:07 GMT   |   Update On 2023-03-14 12:02 GMT
  • கிணற்றில் வீசப்பட்ட 2 குழந்தைகளின் உடல்களையும் குணவதி பிணத்தையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காக்காதோப்பு, புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 33). இவரது மனைவி குணவதி (27), இவர்களுக்கு பிரணவ்பிரியன்(5), சுஜித் பிரியன்(1½) என்ற இரு மகன்கள் இருந்தனர்.

குணவதியும் கோபியும் காதல் திருமணம் செய்தவர்கள். சிறுவன் பிரணவ் பிரியன் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். குணவதி தனது 2 மகன்களுடன் அப்பகுதியில் உள்ள தாய் வீட்டில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் வீட்டில் இருந்த குழந்தைகளை குணவதி அடித்துள்ளார். அப்போது குணவதியின் தந்தை கேசவன் குழந்தைகளை எதற்கு அடிக்கிறாய் என்று திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த குணவதி வீட்டில் இருந்த தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வெளியில் கோபமாக சென்றார்.

இதனிடையே மகளையும் பேரன்களையும் காணாமல் கேசவன் அக்கம்பக்கத்தில் தேடினார். அப்போது வீட்டுக்கு அருகில் 100 மீட்டர் தூரத்தில் உள்ள முருகன் கோவில் தோட்டத்தில் வேப்பமரத்தில் குணவதி தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் 2 குழந்தைகளும் கிணற்றுக்குள் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி துடித்தார்.

இதுபற்றி மோகனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கபப்ட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குணவதி 2 குழந்தைகளையும் கிணற்றுக்குள் வீசி கொன்றுவிட்டு தானும் வேப்பமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதனிடையே துக்கம் தாங்காமல் குணவதியின் தந்தை கேசவன் (70) அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். இதனால் மயங்கி சாய்ந்த உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேசவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கிணற்றில் வீசப்பட்ட 2 குழந்தைகளின் உடல்களையும் குணவதி பிணத்தையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News