உள்ளூர் செய்திகள்

மேல்மருவத்தூர் அருகே நிலத்தகராறில் பாரதிய ஜனதா பிரமுகர் அடித்துக் கொலை

Published On 2023-06-29 11:59 IST   |   Update On 2023-06-29 11:59:00 IST
  • பலத்த காயம் அடைந்த குப்பன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
  • நிலத்தகராறில் பா.ஜனதா பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுராந்தகம்:

மேல்மருவத்தூர் அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் (வயது 47). விவசாயி. மேலும் பாரதிய ஜனதா கட்சியில் கிளை தலைவராகவும் இருந்து வந்தார்.

இவரது வீட்டின் அருகே வசித்து வரும் வேணு மற்றும் அவரது மகன் சரவணன் ஆகியோர் அதே பகுதியில் நிலம் வாங்கி இருந்தனர்.

இந்த சாலை வழியாக குப்பன் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த இடம் தொடர்பாக குப்பனுக்கும், வேணுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி பொது வழி பாதையை வேணு மற்றும் சரவணன் ஆகியோர் டிராக்டர் மூலம் ஊழுததாக தெரிகிறது. இதற்கு குப்பன் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தார்.

இதனால் இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேணு, அவரது மகன் சரவணன் வேணுவின் மனைவி பூங்கா வனம், மற்றும் அவர்களது உறவினரான முனியம்மாள் ஆகியோர் சேர்ந்து குப்பனை கட்டையால் தாக்கினர்.

இதில் பலத்த காயம் அடைந்த குப்பன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். மேலும் வேணு, பூங்காவனம், முனியம்மாள் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

நிலத்தகராறில் பா.ஜனதா பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News