உள்ளூர் செய்திகள்

தண்டையார் பேட்டையில் செல்போன் கடையில் கொள்ளையடித்தவர் கைது

Published On 2022-10-16 15:45 IST   |   Update On 2022-10-16 15:45:00 IST
  • கடையின் பூட்டை உடைத்து செல்போன், பணம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
  • புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சென்னை:

தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருபவர் செல்வகுமார்.

இவரது கடையின் பூட்டை உடைத்து செல் போன், பணம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்ற வாலிபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News