உள்ளூர் செய்திகள்

இந்திய தண்டனை சட்டத்தின் பெயர்களை இந்தி மொழியில் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் உண்ணாவிரதம்

Published On 2023-08-31 11:19 GMT   |   Update On 2023-08-31 11:19 GMT
  • உண்ணாவிரத போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும் சட்ட மசோதாவை திரும்ப பெற கோரியும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.
  • போராட்டத்தில் மூத்த வக்கீல்கள், பெண் வக்கீல்கள், இளம் வக்கீல்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் :

குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருத மொழியிலும் இந்தி மொழியிலும் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ள மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் பாண்டிச்சேரி மற்றும் தமிழக வக்கீல்கள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் இன்று கோரிக்கையை வலியுறுத்தி கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் கோர்ட்டு வளாகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு திருப்பூர் வக்கீல் சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மூத்த வக்கீல்கள் கே. என் .சுப்பிரமணியம், பாப்பா மோகன் ,பூபேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

அப்போது மத்திய அரசு மறைமுகமாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் விதமாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது. இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் ஓயாது என்றனர்.

உண்ணாவிரத போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும் சட்ட மசோதாவை திரும்ப பெற கோரியும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் மூத்த வக்கீல்கள், பெண் வக்கீல்கள், இளம் வக்கீல்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News