உள்ளூர் செய்திகள்

கொள்ளுமேடு கிராமத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

Published On 2022-12-19 11:56 GMT   |   Update On 2022-12-19 11:56 GMT
  • சூதாட்ட விளையாட்டில் சிலர் ஈடுபடுவதாக ஆரணி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், கொள்ளுமேடு கிராமத்தில் பணம் வைத்து மங்காத்தா எனும் சூதாட்ட விளையாட்டில் சிலர் ஈடுபடுவதாக ஆரணி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, ஊத்துக்கோட்டை துணை சூப்பிரண்டு சாரதி உத்தரவின் பேரில் பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேற்று விரைந்து சென்றனர்.

அங்கு பணம் வைத்து மங்காத்தா என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நான்கு பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரொக்க பணம் ரூ.4,460- மற்றும் 114 எண்ணிக்கை கொண்ட சீட்டுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் நாலு பேரும் கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை(வயது48), தினேஷ்குமார்(வயது32), ராஜீவ்காந்தி (வயது37), நரேஷ்(வயது37) என்பதும் தெரியவந்தது. இவர்கள் நாலு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆரணியில் கொடிகட்டி பறந்த காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் ஐந்து பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து தற்போது மங்காத்தா எனும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News