உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் கஞ்சா, போதைக்காளான் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

Published On 2023-02-13 10:45 IST   |   Update On 2023-02-13 10:46:00 IST
  • கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து போதை காளான், கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை காளான் தேடி சென்ற வாலிபர்கள் வனப்பகுதியில் மயங்கி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து போதை காளான், கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு அதிகம் சப்ளை செய்யப்படுவதால் அடிக்கடி உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை காளான் தேடி சென்ற வாலிபர்கள் வனப்பகுதியில் மயங்கி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் மற்றும் போலீசார் நாயுடுபுரம் பகுதியில் சோதனையிட்டனர்.

அப்போது வீட்டில் கஞ்சா, போதைகாளான் பதுக்கியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராம்குமார் மனைவி வேளாங்கண்ணி ஜெனிபர் (வயது23) என்பவரை கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில் ராம்குமார் கோவை மாவட்டம் கிணத்துகடவு பகுதியில் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் தனது நண்பர்கள் மூலம் கொடைக்கானலில் உள்ள மனைவி ஜெனிபருக்கு கஞ்சா சப்ளை செய்து வந்துள்ளார். அதனை கேரள மாநிலம் கொச்சி கல்லூர் பகுதியை சேர்ந்த அல்கத் (25) என்பவர் மூலம் விற்பனை செய்துள்ளார். மேலும் பாக்கியபுரம் பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வந்த அந்தோணிராகுல் (20) என்பவரும் போதை காளான் மற்றும் கஞ்சாவை சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News