உள்ளூர் செய்திகள்

கூடங்குளம் அருகே லாட்ஜில் தூக்குப்போட்டு கேரள டிரைவர் தற்கொலை

Published On 2023-03-19 14:47 IST   |   Update On 2023-03-19 14:47:00 IST
  • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • ரதீஷ்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? எதற்காக கேரளாவில் இருந்து இங்கு வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

கேரள மாநிலம் கொல்லம் அருகே வடக்கு மயிலக்காடு பகுதியை சேர்ந்தவர் ரதீஷ்குமார் (வயது 43). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கொரோனாவால் இறந்துவிட்டார்.

இந்நிலையில் நேற்று நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதிக்கு ரதீஷ்குமார் வந்துள்ளார். அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். இன்று காலை வெகுநேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படாததால் ஊழியர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுதொடர்பாக கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரதீஷ்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? எதற்காக கேரளாவில் இருந்து இங்கு வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News