காஞ்சிபுரம் அருகே தொழிலாளி தற்கொலை
- காஞ்சிபுரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த சிறு காவேரிப்பாக்கம், ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 48). தொழிலாளி. இவருக்கு முதுகு தண்டுவடத்தில் அதிகவலி இருந்து வந்ததால் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்த பிறகும் முதுகு தண்டுவட வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் வலியை தாங்கமுடியாமல் இருந்து வந்த ஜானகிராமன் மனமுடைந்து அரளி விதையை அரைத்து மதுவில் கலந்து குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு ஜானகிராமனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து உயிரிழந்த ஜானகிராமன் மகன் பூவரசன் கொடுத்த புகாரின் பேரில் பாலுச்செட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.