உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் துணை தாசில்தார் மனைவி மர்ம மரணம்

Published On 2022-08-17 16:11 IST   |   Update On 2022-08-17 16:11:00 IST
  • உத்திரமேரூர் துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் சதீஷ்.
  • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

காஞ்சிபுரம்:

உத்திரமேரூர் துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் சதீஷ். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு குடியிருப்பு வாரிய வீட்டில் வசித்து வந்தனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த சங்கீதா திடீரென இறந்ததாக காஞ்சிபுரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சங்கீதா எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

சதீசும், சங்கீதாவும், கடந்த 6 ஆண்டுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கலப்பு திருமணம் செய்துள்ளனர். நேற்று இரவு அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் சங்கீதா இறந்து இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து துணை தாசில்தார் சதீசிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News