உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அருகே வியாபாரி தற்கொலை

Published On 2023-03-04 05:40 IST   |   Update On 2023-03-04 05:40:00 IST
  • எல்லப்பா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் விக்னேஸ்வர்.
  • காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், எல்லப்பா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் விக்னேஸ்வர் (33). இவர் பட்டுசேலை வியாபாரம் செய்து வந்தார். இந்ந நிலையில் பட்டுசேலை வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் இருந்த கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், விக்னேஸ்வரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News