உள்ளூர் செய்திகள்

கல்பாக்கம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2022-12-16 12:11 IST   |   Update On 2022-12-16 12:11:00 IST
  • லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்பிற்கு தகவல் கிடைத்தது.
  • லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட புதுப்பட்டினம் ஆர்.எம்.ஐ. நகர் பகுதியை சேர்ந்த செந்தில் குமரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கல்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்பிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட புதுப்பட்டினம் ஆர்.எம்.ஐ. நகர் பகுதியை சேர்ந்த செந்தில் குமரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News