உள்ளூர் செய்திகள்
கடம்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
- வீட்டில் இருந்த பித்தளை சாமான், வெள்ளி பொருட்கள் போன்றவை திருடு போனது தெரிய வந்தது.
- போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர் ஜே.நகரை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 42). இவர் தனது மகன் பிரதீப் மற்றும் மகள் அபிநயா ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 28-ந்தேதியன்று தனலட்சுமி தன் பிள்ளைகளுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த பித்தளை சாமான், வெள்ளி பொருட்கள் போன்றவை திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து தனலட்சுமி கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.