உள்ளூர் செய்திகள்
திருக்கழுக்குன்றம் அருகே கோவிலில் பூட்டை உடைத்து நகை கொள்ளை
- எடையூர் கிராமத்தில் பழமையான பிடாரி செல்லியம்மன் கோயில் உள்ளது.
- திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அருகே உள்ள எடையூர் கிராமத்தில் பழமையான பிடாரி செல்லியம்மன் கோயில் உள்ளது. நள்ளிரவு வந்த மர்ம கும்பல் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி, கம்மல், மூக்குத்தி மற்றும் பீரோவில் இருந்த பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 20 பவுன் நகை, வெள்ளி கொலுசு, உண்டியல் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.