உள்ளூர் செய்திகள்

ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக குட்கா, கஞ்சா கடத்தல் அதிகரிப்பு- போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

Published On 2022-11-29 13:03 IST   |   Update On 2022-11-29 13:03:00 IST
  • ஊத்துக்கோட்டை அண்ணா சிலை, அண்ணா நகர், சக்திவேடு சாலைகளில் இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • ஆந்திராவில் இருந்து வரும் அனைத்து வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப்படுகிறது.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை நகரம் தமிழக எல்லையில் உள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதி மற்றும் சத்தியவேடு பகுதிகளில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக சென்னை உட்பட பல பகுதிகளுக்கு தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவு கடத்துவது அதிகரித்து உள்ளது.

இதனை தடுக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் கல்யான் போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி, இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், சிவா, முருகேசன் பரமசிவம், ஏட்டுகள் சுந்தரம் ராஜன், முருகேசன் ஆகியோர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஊத்துக்கோட்டை அண்ணா சிலை, அண்ணா நகர், சக்திவேடு சாலைகளில் இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆந்திராவில் இருந்து வரும் அனைத்து வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப்படுகிறது. கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி எச்சரித்து உள்ளார்.

Similar News