உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே குடும்ப அட்டை திருத்தல் முகாமில் 40 மனுக்களுக்கு உடனடி தீர்வு

Published On 2022-07-10 07:00 GMT   |   Update On 2022-07-10 07:00 GMT
  • புகைப்படம் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், உள்ளிட்ட 52 மனுக்கள் பெறப்பட்டது.

பொன்னேரி:

மாவட்ட ஆட்சியர் ஆல் பி. ஜான்வகீஸ் உத்தரவின் படி பொன்னேரி அடுத்த பண்டிக்காவனூர் ஊராட்சியில் குடும்ப அட்டை பெயர் திருத்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மின்னணு அட்டையில் மாற்றம், புகைப்படம் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், உள்ளிட்ட 52 மனுக்கள் பெறப்பட்டது. இவற்றில் 40 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. வட்ட வழங்கல் அலுவலர் சண்முகசுந்தரம், தலைவர் சதீஷ்குமார், துணைத் தலைவர் சரண்யா சரவணன், கிராம உதவியாளர் மலர்விழி மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News