உள்ளூர் செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே டிராக்டர் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
- டிராக்டர் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசாந்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிரிவேடு:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோங்கல்மேடு கிராமத்தில் வசித்து வந்தவர் பிரசாந்த் (வயது40). டிராக்டர் டிரைவரான இவர், நேற்று காலை வீட்டின் அருகே உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசாந்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.