உள்ளூர் செய்திகள்
மின் கம்பத்தில் இறந்து தொங்கிய ராட்சத வவ்வால்
- மின் கம்ப வயரில் இறந்தபடி மிகப் பெரிய வவ்வால் தொங்கிக் கொண்டிருந்தது.
- மின் கம்ப வயரில் அடிபட்டு இறந்துவிட்டதாக பருந்து அளவில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பொன்னியம்மன் கோயில் தெரு மின் கம்ப வயரில் இறந்தபடி மிகப் பெரிய வவ்வால் தொங்கிக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு அரிதாக காணப்படும் மிகப்பெரிய வவ்வாலை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்து செல்கின்றனர். இவ்வவ்வால் வழி தவறி ஊருக்குள் வந்ததால் மின் கம்ப வயரில் அடிபட்டு இறந்துவிட்டதாகவும் பருந்து அளவில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.