உள்ளூர் செய்திகள்

புரசைவாக்கத்தில் சிலிண்டர் வெடித்து தீவிபத்து

Published On 2023-06-20 08:15 GMT   |   Update On 2023-06-20 08:15 GMT
  • சமையல் செய்வதற்காக கியாஸ் சிலிண்டரை திறந்த போது சிலிண்டர் வெடித்து சிதறியது.
  • வேப்பேரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

சென்னை:

சென்னை புரசைவாக்கம் நியுமாணிக்கம் தெரு பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் ரபீஸ் என்பவரின் டெக்ஸ்டைல் கடையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் தங்கி உள்ளனர்.

அவர்கள் சமையல் செய்வதற்காக கியாஸ் சிலிண்டரை திறந்த போது சிலிண்டர் வெடித்து சிதறியது. வேப்பேரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

சைதாப்பேட்டை சி.ஐ.டி.நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. அதுவும் பின்னர் பரவாமல் தடுக்கப்பட்டது.

Tags:    

Similar News