உள்ளூர் செய்திகள்

ராமாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு- மெக்கானிக் உள்பட 6 பேர் கும்பல் கைது

Published On 2022-09-20 12:13 IST   |   Update On 2022-09-20 12:13:00 IST
  • ராமாபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டன்.
  • ராமாபுரம் போலீசில் புகார் செய்தார்.

போரூர்:

ராமாபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டன். இவரது மகன் ராஜா. ஆன்லைன் டெலிவரி ஊழியர். இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடு போனது. இதுகுறித்து ராஜா ராமாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ரமேஷ் மற்றும் கே.கே நகரை சேர்ந்த பழனி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிளை திருடி திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரேம்குமார் என்பவரிடம் ரூ10ஆயிரத்துக்கு விற்றது தெரிந்தது. மேலும் பிரேம்குமார் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் வேலை பார்த்து வரும் தனது நண்பர்களான கதிரவன் மற்றும் ஜனார்த்தனன் மூலம் திருட்டு மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்களை பிரித்து நூதனமான முறையில் மாற்றம் செய்து ஆரணியை சேர்ந்த மெக்கானிக் ஸ்ரீதர் என்பவரிடம் ரூ18ஆயிரத்துக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து பிரேம்குமார், பைக் மெக்கானிக்கான கதிரவன், ஜனார்த்தனன், ஸ்ரீதர் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News