உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே சூதாட்ட கும்பல் பிடிபட்டது

Published On 2022-10-16 15:26 IST   |   Update On 2022-10-16 15:26:00 IST
  • ஒரே நாளில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • தொரப்பாடி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பண்ருட்டி:

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவுப்படி தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் தீவிர சூதாட்ட வேட்டை நடந்தது.

மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 40 பேர் கைது செய்யப்பட்டனர். பண்ருட்டி புதுப்பேட்டையில் டி.எஸ்.பி. சபியுல்லா மேற்பார்வையில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் தீவிர வேட்டை நடந்தினர். அப்போது தொரப்பாடி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவர்களுக்கு இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தக்க அறிவுரை வழங்கினார். இந்த சூதாட்ட வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்றார்.

Similar News