உள்ளூர் செய்திகள்

இலவச கண் பரிசோதனை முகாம்

Published On 2022-10-30 13:39 IST   |   Update On 2022-10-30 13:39:00 IST
  • 120 பேருக்கு உடனடியாக கிட்டபார்வை கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
  • கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக உடனடியாக கண்ணாடி வழங்கப்பட்டது.

மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஜே.எஸ்.டபிள்யூ. பவுண்டேஷன் ஏற்பாட்டில் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி அப்பாவு, சேர்மன் ரவி தலைமையில் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தூரப்பார்வை, கிட்டப்பார்வை பரிசோதனை செய்யப்பட்டு கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக உடனடியாக கண்ணாடி வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 200க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்த நிலையில் 120 பேருக்கு உடனடியாக கிட்டபார்வை கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

Similar News