உள்ளூர் செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு கருவிகளுக்கு முதல் மற்றும் இரண்டாவது சீரற்றமயமாக்கல்

Published On 2022-07-02 12:07 GMT   |   Update On 2022-07-02 12:08 GMT
காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் கணேசன் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள 4 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு கருவிகளுக்கு முதல் மற்றும் இரண்டாவது சீரற்றமயமாக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர். மா. ஆர்த்தி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) டி.ஆர்.ஸ்ரீதர், காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் கணேசன் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News