உள்ளூர் செய்திகள்

அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் கூலி தொழிலாளி மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது

Published On 2024-01-23 09:09 GMT   |   Update On 2024-01-23 09:09 GMT
  • அன்னக்கொடிக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.
  • 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு அன்னக்கொடி உறவினர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா, கல்வாரை பகுதியை சேர்ந்தவர் தனபால். கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கொடி. கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக தேவர் மலையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அன்னக்கொடி மற்றும் உறவினரை ஏற்றுக்கொண்டு பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அன்னக்கொடிக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.

நிலைமையை புரிந்து கொண்ட அவசரகால மருத்துவ நுட்புநர் பூபதி சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தி 108 ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அப்போது அன்னக்கொடிக்கு பெண் குழந்தை பிறந்தது.

பின்னர் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தாயும், குழந்தையும் நன்றாக உள்ளனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு அன்னக்கொடி உறவினர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Tags:    

Similar News