உள்ளூர் செய்திகள்

தாராபுரத்தில் வேலைக்கு செல்லாததை கண்டித்த விவசாயி அடித்துக்கொலை- மகன் வெறிச்செயல்

Published On 2023-03-01 04:31 GMT   |   Update On 2023-03-01 04:31 GMT
  • பலத்த காயம் அடைந்த தண்டபாணி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
  • அலங்கியம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை ரோடு தளவாய்பட்டினம் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 55) விவசாய தொழிலாளி. இவரது மகன் காளிதாஸ் (29).

காளிதாசுக்கு திருமணமான நிலையில் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் தண்டபாணி வேலைக்கு செல்லுமாறு மகனை கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று அறுவடை பணியை முடித்துக்கொண்டு தண்டபாணி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் படுத்திருந்த காளிதாசுக்கும் தண்டபாணிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மகனை கண்டிக்க இரும்பு கம்பியை எடுத்து மிரட்டிய போது அந்த இரும்பு கம்பியை பிடுங்கிய காளிதாஸ், தந்தை என்றும் பாராமல் தண்டபாணியின் தலையில் ஓங்கி அடித்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த தண்டபாணி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தண்டபாணி இறந்தார்.

இதுகுறித்து அலங்கியம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான காளிதாசை தேடி வருகின்றனர். தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News