உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம்

Published On 2022-10-15 12:23 IST   |   Update On 2022-10-15 12:23:00 IST
  • வேண்பாக்கம் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில். மின்சாரம் சம்பந்தமான நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
  • கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த வேண்பாக்கம் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில். மின்சாரம் சம்பந்தமான நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். பொன்னேரி செயற்பொறியாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார்.

இதில் பொன்னேரி, அனுப்பம்பட்டு, கும்மிடிப்பூண்டி ஏலாவூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள், தொழிற்சாலை அதிகாரிகள், பொதுமக்கள், கலந்து கொண்டு பல்வேறு குறைகளை தெரிவித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News