உள்ளூர் செய்திகள்

மின்சார உயர்வு மற்றும் உணவு பொருள் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து தே.மு.தி.க ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-29 11:00 GMT   |   Update On 2022-07-29 11:00 GMT
செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே தே.மு.தி.க. சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ.அனகை முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு:

தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின்சார உயர்வு மற்றும் உணவு பொருள் மீதான ஜி.எஸ்.டி.வரி உயர்வை மத்திய- மாநில அரசுகள் திரும்ப பெற வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே தே.மு.தி.க. சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ.அனகை முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில தொழில்சங்க பேரவை செயலாளர் காளிராஜன், தம்பி முருகன், முகிலரசன், கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கறீம், நகர செயலாளர்கள் முருகம், ரங்கன், எம்.ஜி.மூர்த்தி, பிரபு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் லயன் நாகராஜ், கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் எத்திராஜ், ராமதாஸ், ஜெயபால், கவுன்சிலர் தனலட்சுமி முருகன், அலாவுதீன் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News