தக்கலை அருகே பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தை மீது மகள் பரபரப்பு புகார்
- தந்தை மீது மகள் பாலியல் ரீதியான புகார் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தந்தை மீது மகள் பாலியல் ரீதியான புகார் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குழித்துறை:
குமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, நாகர்கோவில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
நான் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு, நர்சிங் படிப்பதற்காக விண்ணப்பித்து உள்ளேன். சிறு வயதில் இருந்தே எனது தந்தை மது அருந்தி விட்டு வந்து எனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்து வந்தார். இதனால் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
ஆனால் அவர் வெளிநாட்டு வேலைக்குச் சென்றதால் சிறிது காலம் எந்தப் பிரச்சினையும் இல்லை. தற்போது வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த அவர் மீண்டும் பாலியல் தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் மாணவியின் தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை மீது மகள் பாலியல் ரீதியான புகார் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.