உள்ளூர் செய்திகள்

கடலூரில் ஓடும் அரசு பஸ்சில் மாணவர்கள் மோதல்-ரகளை

Published On 2022-11-15 10:33 IST   |   Update On 2022-11-15 10:33:00 IST
  • பஸ் கே.என்.பேட்டை பகுதியில் சென்ற போது மாணவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது.
  • பஸ்சின் உள்ளே இருந்த விளக்குகள் அடித்து நொறுக்கப்பட்டது.

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப் புலியூர் பஸ் நிலையத்தில் இருந்து பாலூர் வழியாக பண்ருட்டிக்கு அரசு பஸ் நேற்று மாலை புறப்பட்டு சென்றது.

இந்த பஸ்சில் திருப்பாதிரிப்புலியூர் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏராளமானோர் பயணித்தனர்.

இந்த பஸ் கே.என்.பேட்டை பகுதியில் சென்ற போது மாணவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

இந்த கட்டத்தில் பஸ்சின் உள்ளே இருந்த விளக்குகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தி திருப்பா திரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையறிந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

ஓடும் பஸ்சில் ரகளை செய்த மாணவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்த வர்கள்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Similar News